நிராகரிக்கப்பட்ட செயலணியில் யோசனைகளை முன்வைத்த எம்.பி!
ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் நாடாளுமன்ற உறுப்பினர் முஸாரப் முதுநபீன் எம்.பி. தமது யோசனைகளை முன்வைத்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்கு ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கு நாடளாவிய ரீதியில் கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுவருகின்றன. எனினும் , அந்த செயலணியின் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தான், முஸாரப் எம்.பியும். தனது யோசனைகளை முன்வைத்துள்ளார். இந்த செயலணியில் பல தரப்பினரும் தமது யோசனைகளை முன்வைத்துள்ளனர்.
அதாவது , இந்த நாட்டை ஒன்றிணைக்கும் முயற்சியில் இந்த செயலணி செயற்பட வேண்டும் என்று ஞானசார தேரர் உள்ளிட்ட செயலணி உறுப்பினர்களைச் சந்தித்த பின்னர் முஸாரப் எம்.பி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அதேவேளை பல விமர்சனைங்களை எதிர்கொண்டுள்ள இந்த செயலணி நிராகரிக்கப்பட வேண்டும் என பல்லரும் அழுத்தங்கள் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
.jpeg
)





கருத்துகள் இல்லை