பொலிஸ்மா அதிபர் பதவியை பேராயருக்கு வழங்க வேண்டும்!


இலங்கையின் பொலிஸ்மா அதிபர் பதவியை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் வழங்க வேண்டும் என்று ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பிரதானி கலகொட அத்தே ஞானசார தேரர் (Gnanasara Thero) தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16-01-2022) பதுளையில்  ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்தும் தெரிவித்தது,

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் சில செயற்பாடுகளைப் பார்க்கும்போது அவர் அதிகாரபூர்வமற்ற பொலிஸ்மா அதிபராகச் செயற்படுவதாகவே தென்படுகின்றது.

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் ஒரு சாதாரண விடயம் அல்ல. இந்த நாட்டில் விசாரணை நடத்தப்படும் முறையொன்று உள்ளது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் தனது சமூகத்தின் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் பிரச்சினையில்லை. கர்தினால் பொலிஸ்மா அதிபரை விமர்சனம் செய்திருந்தார்.

அவ்வாறானால் பொலிஸ்மா அதிபர் பதவியை ஜனாதிபதி கர்தினாலிடம் வழங்குவதே பொருத்தமானது என ஞானசார தேரர் (Gnanasara Thero) தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.