உணவு, உறக்கமின்றி பாட்டி உருக்கமான கோரிக்கை!


கொழும்புக்கு சென்ற நிலையில்  காணமல் போன தனது பேரனை கண்டுப் பிடித்து தருமாறு உணவு, உறக்கமின்றி பாட்​டி ஒருவர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சூர நகர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் தர்மவதி வயது 72) பாட்டியே, இவ்வாறு உணவு, உறக்கமின்றி அழுது புலம்புகிறார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மாணிக்கராசா மதுசாந் வயது (21) என்ற இளைஞன் வறுமை நிலமை காரணமாக கொழுமபபு வெள்ளவத்தைக்கு தனது உறவினர்களுடன் கூலி வேலைக்காக 09.01.2022 ஆம் திகதியன்று சென்றுள்ளார். மன நலம் பாதிக்கப்பட்டவரான இவர் சிகிச்சை பெற்றுவந்ததினால் ஓரளவு நோய் குறைவடைந்து காணப்பட்டுள்ளது.

பொங்கல் தினத்திற்கு மறுநாளான 15.1.2022 ஆம் திகதியன்று வெளியில் சென்றவேளை காணமல் போயிருந்தார். இவரை காணவில்லையென தேடியபோது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து 16.1.2022 ஆம் திகதி இரவு மீட்டுள்ளனர்.

அதன் பின்னர் அவரை இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல முற்சக்கரவண்டியில் ஏற்றுவதற்கு முயற்சித்தபோது அவர்களை தள்ளிட்டு ஓடிச்சென்று மறைந்துள்ளதாக அவரை கொழுப்பிற்கு அழைத்துச் சென்றவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து அவரை கண்டு பிடித்து தருமாறு வெள்ளவத்தைச் பொலிஸ் நிலையம் மற்றும் திருகோணமலை அலி ஒலுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த இளைஞன், 2 வயதாக இருந்த போது, அவரது தாய், நோய்வாய் பட்டு உயிரிழந்த நிலையில் மதுசாந்தை அவரது பாட்டியே பாராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் , 0766794093,0766794093 மற்றும் 0771607517 தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.