தடுப்பூசி மூலம் முன்கூட்டியே தடுக்ககூடிய 21 நோய்கள்!
தற்போதைய சூழலில் நோய் பாதிப்பில் இருந்து குடும்பத்தினரை காத்துக் கொள்ள பொதுமக்கள் சுகாதாரப் பணியாளர்களை அணுகுமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
சுவிஸில் ஜெனீவா நகரில் இருந்து செயல்படும் உலக சுகாதார நிறுவனம், சர்வதேச அளவில் காணப்படும் தொற்று நோய்கள் மற்றும் அதன் தடுப்பு வழிகள் குறித்த விபரங்களை வெளியிட்டு வருகிறது.
இதேவேளை, தடுப்பூசி மூலம் முன்கூட்டியே தடுக்கக்கூடிய 21 நோய்களின் பட்டியலை தமது ட்விட்டர் பக்கத்தில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், காலரா, டிஃப்தீரியா, எபோலா, கல்லீரல் அலர்ச்சி நோய், தட்டம்மை, மூளைக்காய்ச்சல், நிமோனியா, போலியோ, டைபாய்டு, வெரிசெல்லா உள்பட 21 நோய்கள் வராமல் தடுக்க தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சுகாதார மையங்களையும், பணியாளர்களை அணுகி தடுப்பூசி குறித்த விபரங்களை உறுதி செய்து, உங்களையும், உங்கள் குடும்பத்தினரையம் காத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை