விடுதியில் திடீர் சுற்றிவளைப்பு!
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி - இரத்மலானை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட தகாத விடுதியொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அங்கு தகாத தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்கள், கொட்டாவ, பொலன்னறுவை, நாரம்பனாவ, மித்தெனிய, இரத்மலானை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் அனைவரும் 34 - 51 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கைதான சந்தேகநபர்களை கல்கிசை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை