பகல் கனவு ஒருபோதும் பலிக்காது - அமைச்சர் மஹிந்தானந்த!!

 


"அரசுக்கு எதிராக தற்போது விமர்சனங்கள் குவிந்தாலும், இன்னும் ஏழு மாதங்களில் இந்நிலைமை தலைகீழாக மாறும் என்பது உறுதி. அதேபோல் எதிரணிகளின் பகல் கனவும் பலிக்காது." 


- இவ்வாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-


"இன்று சமூகவலைத்தளங்கள் பக்கம் சென்றால் அநுரகுமார திஸாநாயக்கதான் அடுத்த ஜனாதிபதி, ஆட்சி அமைப்பது தொடர்பில் சஜித் பேசசு என்றெல்லாம் பதிவுகள் உள்ளன. 


கடந்த 5 ஆண்டுகளில் இவர்கள்தான் நாட்டைச் சீரழித்தனர். நாட்டு வளங்களை விற்பனை செய்தனர்.


சமூகவலைத்தளங்கள் ஊடாக அரசுக்கு எதிராக பிரசாரம் முன்னெடுக்கப்பட்டாலும் இன்னும் 6, 7 மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறும். 


கடந்த ஆட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டிவரும். இந்த ஆட்சியின் கீழ் ஜனநாயகம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றது. அதனால்தான் கள்வர்களெல்லாம் கத்துகின்றனர்" - என்றார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.