வெற்றி பெறுமா இந்தியா!!


இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், கீகன் பீட்டர்சன் 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி, இந்தியக் அணியின் வெற்றி இலக்குடன் ஒப்பிடுகையில் 111 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

கேப் டவுனில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, விராட் கோஹ்லி 79 ஓட்டங்களையும் புஜாரா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், ரபாடா 4 விக்கெட்டுகளையும் மார்கோ ஜென்ஸன் 3 விக்கெட்டுகளையும் ஒலிவியர், லுங்கிடி மற்றும் மஹாராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 210 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கீகன் பீட்டர்சன் 72 ஓட்டங்களையும் டெம்பா பவுமா 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பும்ரா 5 விக்கெட்டுகளையும் உமேஷ் மற்றும் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் தாகூர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

13 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 198 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்கா அணிக்கு 212 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப்பந்த் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மார்கோ ஜென்ஸன் 4 விக்கெட்டுகளையும் லுங்கி ங்கிடி மற்றும் ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 212 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இன்னமும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை தென்னாபிரிக்கா அணி இன்று தொடரவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.