மீண்டும் தோற்றது இந்தியா!


இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ள தென்னாபிரிக்கா, தொடரையும் தன்வசப்படுத்தியுள்ளது.

பார்ல் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 85 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டப்ரைஸ் சம்சி 2 விக்கெட்டுகளையும் மகலா, மார்கிரம், மஹாராஜ் மற்றும் பெலுக்வாயோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 288 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி, 48.1 ஓவர்கள் நிறைவில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜெனிமேன் மாலன் 91 ஓட்டங்களையும் குயிண்டன் டி கொக் 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பும்ரா, சஹால், சர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 66 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட குயிண்டன் டி கொக் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, நாளை கேப்டவுணில் நடைபெறவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.