குருதிச்சுத்திகரிப்பு இயந்திரம் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு வழங்கிவைப்பு!!
வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் குருதிச்சுத்திகரிப்பு இயந்திரத்தொகுதி கையளிக்கப்பட்டது.
எதிரக்கட்சி தலைவர் நேற்றையதினம் வவுனியாவிற்கு வருகை தந்ததுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு செயற்திட்டத்தின் ஊடாக வவுனியா வைத்தியசாலைக்கு 24 இலட்சம் பெறுமதியான குருதிச்சுத்திகரிப்பு இயந்திரத்தொகுதியியை கையளித்ததுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கெடுத்திருந்தார்.
இதனையடுத்து இன்று (08) காலை செட்டிகுளம் வைத்தியசாலைக்கு சென்ற அவர் 25 இலட்சம் பெறுமதியான குருதிச்சுத்திகரிப்பு இயந்திரத்தொகுதியினை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்திருந்தார்.
வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதியுர்தீன், புத்திகபத்திரன, ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் உமா சந்திரபிரகாஸ், வன்னி மாவட்ட அமைப்பாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை