வவுனியாவில் தங்க நகைகள் பணம் கொள்ளை!!

 


வவுனியா புதுக்குளம் தேவகுளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்கு நுழைந்த திருடர்கள் வீட்டிலுள்ளவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள், பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு . மேற்கொள்ளப்பட்டுள்ளது .



 வவுனியா புதுக்குளம் தேவதளம் பகுதியில் நேற்று (05) இரவு 11 மணியளவில் வீடு ஒன்றிற்குள் சத்தமாக குரைத்துக்கொண்டிருந்த நாய் ஒன்றினை வீட்டினைத்திறந்து வெளியே விட  சென்றபோது அங்கு பதுங்கியிருந்த பத்திற்கு மேற்பட்ட திருடர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டிலுள்ளவர்களை தாக்கிவிட்டு அணிந்திருந்த எட்டுப்பவுண் தங்க நகைகள் உட்பட பதினோராயிரம் ரூபா பணம் என்பனவற்றை கத்தி முனையில் கொள்ளையிட்டு , தப்பிச்சென்றுவிட்டதாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு . மேற்கொள்ளப்பட்டுள்ளது .




தாக்குதல் மேற்கொண்ட குறித்த சம்பவத்தில் குடும்பஸ்தவரான சிறீஸ்கந்தவாசன் 59 வயதுடைய நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.




இச்சம்பவம் குறித்து தடயவியல் பொலிசார் வரவழைக்கப்பட்டு மோப்ப நாய் சகிதம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.