பிரிந்த ஜோடி மீண்டும் இணைகிறார்களா!!

 


கடந்த சில நாட்களாகவே எங்கு திரும்பினாலும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து செய்தி தான் ஒலித்து கொண்டே உள்ளது. திரும்பும் திசையெல்லாம் இதே செய்தி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதேபோல் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சமந்தா நாக சைதன்யா விவாகரத்து செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.


பிரபல நட்சத்திரங்களான இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கானாவே வியக்கும் அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். நிச்சயம் பலரும் பொறாமைப்படும் அளவிற்கு இருவரும் காதல் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருவார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர்.


ஆனால் இவர்கள் இருவரும் திடீரென அவர்களின் விவாகரத்து செய்தியை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இவர்களின் விவாகரத்திற்கும் பல காரணங்கள் கூறப்பட்டது. தற்போது இவர்கள் இருவரும் அதை மறந்து அவரவர் வேலையில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள்.


இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா தம்பதி இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த விவாகரத்து தொடர்பான பதிவை தற்போது டெலிட் செய்துள்ளாராம். அதனால் இவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


மேலும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நாக சைதன்யா, “விவாகரத்து சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே” என கூறியிருந்தார். இதுதவிர தற்போது வரை படங்களில் எனக்கு ஏற்ற ஜோடி என்றால் அது சமந்தா தான் என்றும் கூறியிருந்தார். இதனால் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.