ஆசி­ரியை பஹ்­மிதாவுக்காக நீதிமன்றில் வாதாடிய சட்டத்தரணி சுவஸ்­திகா அரு­லிங்கம்

 


திரு­கோ­ண­மலை சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரிக்கு அபாயா அணிந்து கற்­பித்தல் பணி­களில் ஈடு­ப­டச்­சென்­றதன் கார­ண­மாக வெளி­யேற்­றப்­பட்ட ஆசி­ரியை பாத்­திமா ஃபஹ்­மிதா மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்ள எழுத்­தாணை மனுவை (ரிட் மனு) எதிர்­வரும் மார்ச் 16 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுக்க நீதி­மன்றம் கடந்த திங்­க­ளன்று தீர்­மா­னித்­தது.

CA/Writ/125/2021 எனும் குறித்த மனு திங்­க­ளன்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் நீதி­ப­தி­க­ளான சோபித ராஜ­க­ருணா, தம்­மிக கனே­பொல ஆகியோர் முன்­னி­லையில் பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது முன்­வைக்­கப்­பட்ட விட­யங்­களைக் கருத்­திற்­கொண்டே இவ்­வாறு விசா­ர­ணைக்­காக ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அபாயா அணிந்து கற்­பிக்­கச்­சென்ற ஆசி­ரி­யை­களை அபாயா அணி­யக்­கூ­டாது என்றும் சேலை அணிந்து வரு­மாறும் கூறி சண்­முகா கல்­லூரி நிர்­வாகம் வெளி­யேற்­றி­யி­ருந்­தது. இத­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட ஆசி­ரி­யைகள் 2018 மேமாதம் 21 ஆம் திகதி HRC/TCO/27/18 எனும் இலக்­கத்­தின்கீழ் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பா­ட­ளித்­தி­ருந்­தனர். அந்த முறைப்­பாட்டை விசா­ரித்த ஆணைக்­குழு குறித்த சம்­பவம் மனித உரிமை மீறல் எனத் தீர்­மா­னித்து, கடந்த 2019 பெப்­ர­வரி மாதம் 18 ஆம் திகதி தனது பரிந்­து­ரை­களை முன்­வைத்­தி­ருந்­தது. அதன்­படி குறித்த ஆசி­ரி­யர்கள் மீண்டும் சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பித்தல் பணி­களில் ஈடு­பட அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்டும் என்­பது உள்­ள­டங்­க­லாக 5 பரிந்­து­ரை­களை முன்­வைத்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் அந்தப் பரிந்­து­ரைகள் அமுல்­செய்­யப்­ப­டா­த­தை­ய­டுத்து அவற்றை அமுல்­ப­டுத்­து­மாறு உத்­த­ர­வி­டக்­கோரி ஆசி­ரியை பாத்­திமா ஃபஹ்­மிதா மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் மேற்­படி எழுத்­தாணை மனுவைத் தாக்கல் செய்­தி­ருந்தார்.

சண்­முகா பாட­சா­லையின் அதிபர், வல­யக்­கல்விப் பணிப்­பாளர், கல்­வி­ய­மைச்சின் செய­லாளர் உள்­ளிட்டோர் இந்த மனுவில் பிர­தி­வா­தி­க­ளாகப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் இந்த மனு­வா­னது நேற்று மீண்டும் பரி­சீ­ல­னைக்கு வந்­தது. இதன்­போது மனு­தா­ர­ரான ஆசி­ரி­யைக்­காக சட்­டத்­த­ரணி சுவஸ்­திகா அரு­லிங்கம் ஆஜ­ரானார்.

கடந்த ஜன­வரி 19 ஆம் திகதி நீதி­மன்றில் காணப்­பட்ட இணக்­கப்­பாட்­டிற்கு அமைய கல்­வி­ய­மைச்சின் செய­லா­ளரால் அனுப்­பப்­பட்ட இட­மாற்­றக்­ க­டி­தத்­திற்கு அமைய பெப்­ர­வரி 2 ஆம் திகதி தனது சேவை பெறுனர் சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரிக்குக் கற்­பித்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காகச் சென்­ற­தாக அவர் மன்­றுக்குக் குறிப்­பிட்டார். எனினும் கற்­பித்தல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டவோ அல்­லது பாட­சாலை வர­வுப்­புத்­த­கத்தில் கையெ­ழுத்­தி­டவோ அன்­றைய தினம் அவர் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை எனவும் அதனை மையப்­ப­டுத்­திய சம்­ப­வங்­களால் பதற்­ற­மான சூழ்­நிலை உரு­வா­ன­தா­கவும் தெரி­வித்தார். பெப்­ர­வரி 2 ஆம் திகதி தனது சேவை பெறுநர் சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் முகங்­கொ­டுத்த சம்­பவம் என்ன என்­ப­தையும் அவர் மன்றில் விப­ரித்தார்.

மனுவின் பிர­தி­வா­தி­களில் ஒரு­வ­ரான கல்­வி­ய­மைச்சின் செய­லாளர் அனுப்­பிய கடி­தத்­திற்கு அமை­வா­கவே தனது சேவை பெறுநர் சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரிக்கு பெப்­ர­வரி 2 ஆம் திகதி சென்­ற­தா­கவும் அங்கு இடம்­பெற்ற சம்­ப­வங்­களைத் தொடர்ந்து அன்­றைய தினம் மாலை அவரை திரு­கோ­ண­மலை வல­யக்­கல்விப் பணி­ம­னைக்கு இட­மாற்றி மாகா­ணக்­கல்விப் பணிப்­பாளர் கடிதம் அனுப்­பி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். தனது சேவை பெறுநர் கல்­வி­ய­மைச்சின் செய­லா­ளரின் கடி­தத்­திற்கு அமை­வாக செயற்­ப­ட­வேண்­டுமா அல்­லது மாகா­ணக்­கல்விப் பணிப்­பா­ளரின் கடித்­திற்கு அமைய செயற்­ப­ட­வேண்­டுமா என்றும் சட்­டத்­த­ரணி சுவஸ்­திகா அரு­லிங்கம் மன்றில் கேள்வி எழுப்­பினார்.

இதனையடுத்து பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட அரச சட்டவாதி கடந்த ஜனவரி 19 ஆம் திகதி நீதிமன்றில் காணப்பட்ட இணக்கப்பாடு தற்போது முறிந்துள்ள நிலையில், இவ்வழக்கை விசாரணைசெய்ய வாதங்களுக்கு திகதி குறிக்குமாறு கோரினார்.

இதனையடுத்து முன்வைக்கப்பட்ட இருதரப்பு விடயங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் மனுவை எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.