யாழில் ஊடகவியலாளரைத் தாக்கியவர் கைது!


 யாழ். சாவகச்சேரியில் ஊடகவியலாளரைத் தாக்கி உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.


கடந்த 31ஆம் திகதி மதியம் கடமை முடித்து சாவகச்சேரி – கச்சாய் வீதியால் வீடு திரும்பிய ஊடகவியலாளரை வானில் வந்தவர்கள் மோத முற்பட்டதுடன், அவரைத் தாக்கிக் காயப்படுத்தியும் இருந்தனர்.


இது தொடர்பாக ஊடகவியலாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.


இந்தநிலையில் பொலிஸார் சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்தனர்.


அத்துடன் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் அதன் சாரதி மீதும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.