இரும்புக் கம்பியால் குத்திக்கொலை!


போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நந்திமித்ரகம பகுதியில் நேற்றிரவு இரும்புக் கம்பியால் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தால் உயிரிழந்தவர் நந்திமித்திரகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரு நபர்களுக்கு இடையில் இடம்பெற்ற தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக போகஸ்வெவ பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என தெரியவந்துள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் நந்திமித்திரகம பகுதியை சேர்ந்த 51 வயதுடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.