பல கோடி சொத்துக்களைத் துறந்து துறவு பூண்டுள்ள கோடீஸ்வர குடும்பம்!!

 




இந்தியாவில் பல கோடிகளுக்கு அதிபதியான குடும்பம் அனைத்து சொத்துக்களையும் துறந்துவிட்டு சமண துறவிகளாக மாறியுள்ள னர்.

சத்திஷ்கரை சேர்ந்த புபேந்திரா டக்லியா என்பவர் மருந்து வணிகத்தில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு சப்னா என்ற மனைவியும் 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இந்த குடும்பத்துக்கு சுமார் ரூ 81 கோடிக்கு மேல் (இலங்கை மதிப்பில்) சொத்துக்கள் உள்ளது.

இந்நிலையில் அனைத்து சொத்துக்களையும் துறந்து சமண துறவிகளாக மாறியுள்ளனர் புபேந்திரா மற்றும் குடும்பத்தார்கள்.

அதன்படி ஐந்து நாட்கள் சடங்கு விழாவிற்குப் பிறகு ஜெயின் துறவிகளாகத் மாறியுள்ளனர்.

மேலும் அவர்கள் சமண துறவிகளாக, உலக ஆதாயங்களையும் இன்பங்களையும் துறந்து, யாசகம் மற்றும் மத நன்கொடைகளில் உயிர்வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குடும்பத்தாரரின் முடிவு பலரையும் நெகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. 



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.