இலங்கையுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் - புதிய அமெரிக்க தூதுவர் அறிவிப்பு!!

 


இலங்கை அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் பொதுமக்கள் ஆகிய தரப்புக்களுடன் இணைந்து பணியாற்ற தாம் ஆர்வத்துடன் உள்ளதாக இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.


கொழும்புக்கு புறப்படுவதற்கு முன்னர், அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டணி ப்ளின்கென்னை (Antony Blinken) சந்தித்ததாக ட்விட்டர் பதிவில் அவர் நேற்றுக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக இருப்பதில் தாம் பெருமை கொள்வதாக, இராஜாங்க செயலாளரிடம் கூறியதாகவும் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், இரு தரப்புகளுக்கிடையே பகிரப்பட்ட மதிப்புகளை ஆராயவும், உறவுகளை பலப்படுத்தவும் ஆவலாக உள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் ஜுலி சங் கூறியுள்ளார்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.