வெடி பொருட்களுடன் விடுதலைப்புலிகளின் தாக்குதல் படகு முல்லைத்தீவில் மீட்பு!!


 முல்லைத்தீவு சாலை கடற்கரைப்பகுதியில் விடுதலைப்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

சாலைப்பகுதி கடற்கரையில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில் புதைந்து கிடந்த படகு குறித்து இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அப் படகு இனம் காணப்பட்டுள்ளது.

அங்கு  வாடி அமைத்து தொழில் செய்துவரும் மீனவர் ஒருவர் படகினை மீட்டு இரண்டாக வெட்டியபோது படகிற்குள் வெடிபொருட்கள் பொருத்தப்பட்டிருப்பது இனம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவம் குறித்து படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு சென்ற படையினர் விசாரணையினை மேற்கொண்டு புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கேரத் தலைமையிலான குழுவினர் மீட்கப்பட்ட படகு தொடர்பில் விசாரணையினை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் அனுமதியுடன் படகினை மீட்டுள்ளார்கள்.

மேலும் படகில் பொருத்தப்பட்டிருந்த பெருமளவான வெடிபொருட்கள் சிறப்பு அதிரடிப்படையினரால் அகற்றப்பட்டு குறித்த வெடிபொருட்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தகர்த்து அழிக்கப்படவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.