முல்லைத்தீவு மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்!


முல்லைத்தீவு மாவட்ட செயலக நடப்பாண்டுக்கான முதலாவது கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் கணக்காய்வு முகாமைத்துவ குழு அமைப்பாளரும் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் கே.லிங்ககேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இன்று(08) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00மணிக்கு இடம்பெற்றது.


இதன்போது மாவட்ட செயலகம் மற்றும் அதன் கீழ் செயற்பட்டுவருகின்ற பிரதேச செயலகங்களின் உள்ளகக் கணக்காய்வு அவதானங்கள், நிதி செயற்பாட்டு முன்னேற்றங்கள், கணக்காய்வு ஐய வினாக்கள், அவற்றுக்கான பதிலளித்தல் தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் விரிவாக  ஆராயப்பட்டுள்ளது

.

மேலும் கடந்த கால கூட்ட அறிக்கை, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


குறித்த கலந்துரையாடலில் குழு உறுப்பினரான கணக்காய்வு முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் சுனில்ஜெயசேகர அவர்கள் Zoom செயலி ஊடாகவும் மேலும் குழு உறுப்பினர்களான மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.யேசுறெஜினோல்ட், அரச கணக்காய்வு அலுவலகத்தின் பதில் கணக்காய்வு அத்தியட்சகர் எம்.ஆதவன் ஆகியோரின் நேரடியான பங்கபற்றுதலுடன் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக, பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.