வெற்றி இலக்காக ஆஸி அணிக்கு 122 ஓட்டங்கள்!!


மூன்றாவது ரி-20 போட்டியில், இலங்கை அணி, அவுஸ்ரேலியா அணிக்கு 122 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

கன்பெர்ரா மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தசுன் சானக ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கேன் ரிச்சட்சன் 3 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹெசில்வுட், ஆஸ்டன் அகர் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னும் சற்று நேரத்தில் 122 என்ற வெற்றி இலக்கை நோக்கி, அவுஸ்ரேலியா அணி களமிறங்கவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.