சுரங்கத்தில் வீழ்ந்த பெண் மீட்பு!!

 


காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை (20-02-2022) காலி – பத்தேகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அந்த கிராஃபைட் சுரங்கக் குழியில் 50 வயதான பெண் ஒருவரே விழுந்துள்ளதாகவும் தற்போது அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை அம்பேகமவில் உள்ள புதர் காட்டுப் பகுதியில் இருந்து அழுகைச் சத்தம் கேட்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், பத்தேகம காவல்துறை குழு விசாரணைகளை மேற்கொண்டதுடன், 45 அடி ஆழமான கிராஃபைட் சுரங்கத்தின் அடிப்பகுதியில் பெண் சிக்கியிருந்ததைக் கண்டறிந்தனர்.

இதனையடுத்து பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.