காவல்துறை மா அதிபருக்கு கோவிட் தொற்று!
தென்னிலங்கை ஊடகம் ஒன்று காவல்துறை மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
காவல்துறை மா அதிபர் செய்து கொண்ட பரிசோதனையின் பின்னர் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக அவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
பரிசோதனை செய்துக்கொள்வதற்கு முன்னர், காவல்துறை மா அதிபர், காவல்துறை தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று, சில காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை