இலங்கைக்கு வந்தார் 'பெட்மேன்'!!
நான்கு முறை கோல்டன் க்ளோப் விருதுவென்ற ஹொலிவூட் நடிகர் ஜோர்ஜ் க்ளூனி, அவரது பிரத்தியேக ஜெட் விமானம் மூலம் நேற்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
லண்டனில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த அவர், இன்று இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் பயணித்த விமானத்திற்கான எரிபொருள் மற்றும் விமான ஊழியர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் என்பன கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நடிகர் ஜார்ஜ் க்ளூனி, பெட்மேன், ஓஷன்ஸ் லெவன், ஓஷன்ஸ் ட்வெல்வ், ஓஷன்ஸ் தர்டீன், ஈஆர், மிட்நைட் ஸ்கை, அப் இன் தி ஏர், கிராவிட்டி மற்றும் தி அமெரிக்கன் போன்ற படங்களில் நடித்த இவர் சிறந்த நடிகர் மற்றும் தயாரிப்புக்காக கோல்டன் க்ளோப் மற்றும் அகடமிக் விருதுகளை வென்றுள்ளார்.
அவர் தனது பிரத்தியேக விமானத்தினூடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று வந்தடைந்த போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை