விருந்தகத்தில் தீ விபத்து -லிந்துலையில் சம்பவம்!!
லிந்துலையில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.
குறித்த விருந்தகத்தின் சமயலறையில் அவர், பணியாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரது ஆடையில் தீப்பற்றியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர், லிந்துலை - லெமலியர் தோட்டத்தைச் சேர்ந்த 72 வயதான ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் லிந்துலை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை