விருந்தகத்தில் தீ விபத்து -லிந்துலையில் சம்பவம்!!

 


லிந்துலையில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.


குறித்த விருந்தகத்தின் சமயலறையில் அவர், பணியாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரது ஆடையில் தீப்பற்றியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர், லிந்துலை - லெமலியர் தோட்டத்தைச் சேர்ந்த 72 வயதான ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் லிந்துலை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.