தொடர் பணிப்புறக்கணிப்பில் இராமேஸ்வரம் மீனவர்கள்!!

 


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்குமாறு கோரி, இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.


இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்தின் அடிப்படையில், இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மீனவர்களின் இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 10 கோடி ரூபா வருமானம் இல்லாது போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

800 க்கும் மேற்பட்ட படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேநேரம், எதிர்வரும் 11 ஆம் திகதி இராமேஸ்வரம் தொடருந்து நிலைய வளாகத்தில் மீனவர்கள் எதிர்ப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.