ஊழியர் காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு!!

 


பணியின்போது விபத்துக்களால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தொழிலாளர் இழப்பீட்டுத் தொகை  20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தொழிலாளர் விவகாரம் தொடர்பான மேற்பார்வை குழுவின் கூட்டத்தில், இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


பணியில் இருக்கும் போது விபத்துக்களால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு மரணம் அல்லது பூரண இயலாமை ஏற்பட்டால் வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 550,000  ரூபாவாக காணப்பட்டது


இந்த நிலையில், குறித்த இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.