இலங்கை சுதந்திர தினம் ஈழத்தமிழர்களை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்-யேர்மனி !📸

 

யேர்மனி தலைநகர் பேர்லினில் இன்று இலங்கை சுகந்திர  நாளை முன்னிட்டு ஓவியர் புகழேந்தி ஐயா அவர்களின் தமிழின அழிப்பை , ஈழத்தமிழர்களின் வலியை பேசும் ஓவியங்களின் தொகுப்பு கண்காட்சியாக Brandenburger Tor வின் வரலாற்றுச் சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. பல்லின மக்கள் மிகவும் ஆர்வமாக ஓவியங்களை பார்வையிட்டு இளையோர்களுடன் உரையாடினர், யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது.


சர்வதேச அரங்கில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் வகையில் வேற்றின மக்களுக்கு ஈழத்தமிழர்களின் வலியை எடுத்துரைக்கும் முகமாக இவ் நிகழ்வு மிகவும் காத்திரமான வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.