நிமலராஜன் கொலை தொடர்பில் பிரிட்டனில் ஒருவர் கைது!


ஊடகவியலாளர் மயில்வாகனம்  நிமலராஜன் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பிரிட்டனில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இலங்கையில் 2000 ஆம் ஆண்டில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் ஒரு பகுதியாக மேலதிக தகவல்களை வழங்குமாறு பிரிட்டனின் மெட்ரோபொலிட்டன் பொலிஸின் யுத்த குற்றபிரிவினர் கோரிவந்தனர்.
இதன்படி செவ்வாய்கிழமை நோர்த்ஹாம்டன்சயரில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேகுற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001இன் 51 வது பிரிவின் கீழ் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக சந்தேகநபர் கைதுசெயயப்பட்டார்.
பின்னர் விசாரணையின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை சம்பவம் குறித்து மேலதிக தகவல்களை வழங்குபவர்கள் எவரிடத்திலிருந்தும் குறிப்பாக லண்டனிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்களிடமிருந்து விடயங்களை செவிமடுக்க தயாராக உள்ளோம் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரன்டாம் பதிப்பு

தமிழ் ஆயுத ஒட்டுக்குழுவான ஈபிடிபியின் அடாவடிகளை அம்பலப்படுத்திய நிலையில் டக்லஸ் தேவானந்தா அவர்களின் உத்தரவின் பேரில்இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் 11 பேர் கொண்ட ஈபிடிபி குழுவால் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இருந்தார்
கொழும்பிலிருந்து டக்ளஸ தேவானந்தா வழங்கிய உத்தரவின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஜெகன் என்பவர் மேற்படி கொலையை நெறிப்படுத்தியிருந்ததாக சொல்லப்பட்டு இருந்தன
நிமலராஜன் நெப்போலியன் அவர்களின் கொலை தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பி 423/2000 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் வழக்கு பதிய பெற்று சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில்
கடந்த ஆண்டு குற்றவியல் நடவடிக்கையை தொடர்ந்து முன்னேடுக்க முடியாது என நிமலராஜன் அவர்கள் தொடர்பான கொலை வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் கை விட்டு இருந்தது
வழக்கின் ஆரம்பத்தில் நெப்போலியன் என அழைக்கப்படும் செபஸ்டியன் ரமேஸ் என்பவரே நிமலராஜன் கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட போதும் யாழ்ப்பாண நீதிமன்ற அதிகாரிகள் சிலரின் வழங்கிய ஒத்துழைப்போடு மேற்குறித்த நபர் இலங்கையை விட்டு தப்பி சென்று இருந்தார்
அதே நேரம் மிக அண்மையில் நிமல்ராஜன் கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியான நெப்போலியன் தற்போதும் தனது வெளிநாட்டு செயற்பாட்டாளர் என ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்கு சொல்லி இருந்தார்
இந்நிலையில் தற்போது மேற்குறித்த கொலையுடன் தொடர்புடைய நபர் ஒருவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001 இந்த பிரிவு 51 கீழான குற்றங்கள் புரிந்த குற்றசாட்டின் கீழ் பிரித்தானியா பொலிஸ் அதிகாரிகள் கைது செய்து இருக்கின்றார்கள்

தமிழ் தரப்புகள் மேற்குறித்த குற்றவாளியை தெளிவாக அடையாளம் காட்ட முன் வந்தால் குறித்த காலப்பகுதியில் தீவகம் உடபட வடக்கில் நடை பெற்ற பல நூறு கொலைகள் மற்றும் அதில் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் , குறித்த சம்பவங்களோடு சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருந்த தொடர்பு உட்பட பல விடயங்களை அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.