இன்று ஆரம்பமாகிறது இலங்கை எதிர் அவுஸ்திரேலியா முதல் T20 போட்டி!!

 


இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.


இன்றைய முதலாவது போட்டி, சிட்டினியில் இரவுநேர ஆட்டமாக இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை அணியின் புதிய நட்சத்திரங்களான பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

அவுஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேசப் இருபதுக்கு 20 போட்டிகளில் இலங்கை 5 போட்டிகளில் பெற்றுள்ளதுடன், அவுஸ்திரேலியா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் இணைந்து விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.

இதேவேளை, இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரை தம்வசமாகியுள்ளது. இந்த நிலையில், அஹமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.