திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 70 திருச்செந்தூர்!!


நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி

நாரி யென்பி லாகு மாக மதனூடே


நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி

நாட றிந்தி டாம லேக வளராமுன்


நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை

நூறு செஞ்சொல் கூறி மாறி விளைதீமை


நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான

நூல டங்க வோத வாழ்வு தருவாயே


காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு

காலம் வந்து வோல மோல மெனுமாதி


காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர்

காள கண்ட ரோடு வேத மொழிவோனே


ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல

ஆழி யங்கை ஆயன் மாயன்  மருகோனே


ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி

யான செந்தில் வாழ்வ தான பெருமாளே.


விளக்கம்: 

***********

◆ஒன்பது வாசல்களைப் பிளந்து வைத்த, அவதூறுக்கு இடமான, இவ்வுடம்பு கால்க ளும் கரங்களும் கொண்டு,


◆நரம்புகள், எலும்புகள் இவைகளால்

ஆகிய சரீரம். அந்த உடம்பினுள் ஒலி என்னும் இந்திரியம் பொருந்த,


◆ எல்லாத் தொழில்களுக்கும் மூலகார ணமான ஐம்பொ றிகள் கொண்டு பல வகையான கூத்துக்களை இவ்வுலகில் ஆடி,


◆இவ்வாறு உயிர் போயிற்று என்று உலகி ல் யாரும் அறியாதபடி உயிர் பிரியும் வரை இந்த உடம்பு வளர்வதற்கு முன்பு,


◆பல கோடி நூல்களைத் தேடிப் படித்து மயக்கத்தை அடைந்து, உலகில் உள்ள செல்வந்தரை நூறு செவ்வையான சொற்களால் பாடி,


◆புத்தி மாறி, அதனால் தீமை விளைந்து, பல விதமான பிணிகளுடன் கலந்த துன்ப வாழ்வை அடையாமல்,  நீ எனது அறிவில் கலந்து


◆உள்ளத்தில் பொருந்தும் ஞான சாஸ்திர ங்கள் முழுவதும் ஓதி உணரக் கூடிய வாழ்வைத் தந்தருள்வாயாக.


◆யமன் வந்து இளைஞன் மார்க்கண்டே யனின் உயிரை வருத்த பாசக்கயிறை வீசுகின்ற சமயத்திலே வெளிப்பட்டு அஞ்சேல் அஞ்சேல் என்று அருளிய ஆதி முதல்வரும்,


◆மன்மதனை நீ உனது ஐந்து மலர்க் கணைகளோடு எரிவாயாக என்று நெ ற்றி கண்ணால் பார்த்த மெளன மூர்த்தியும்,


◆நீலகண்டருமாகிய சிவபெருமானுக்கு வேத முதலாகிய பிரணவ மந்திரத்தின் உட்பொரு ளை உபதேசித்தவனே,


◆ஆலகாலம் தோன்றிய பாற்கடலில்

பள்ளி கொண்டு, கஜேந்திரன் என்னும் யானை யின் அச்சத்தை தீர்த்த ஆதிமூலப் பொருளும்,


◆சக்ராயுதத்தை அழகிய கரத்தில் ஏந்துப வரும், ஆயர்குலத்தில் தோன்றிய வருமா ன மாயன் திருமாலின் மருகோனே, வேத ங்களெல்லாம் உனது திருவ டிகளைத் துதிக்க,


◆சேவற் கொடியைக் கரத்திலே தாங்கிய ஆதிப் பரம் பொருளாகி, திருச்செந்தூரில் வாழ்கின்ற பெருமாளே.


#(ஒன்பது துவாரங்கள்: இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள்.)#


கந்தா சரணம்.... ஷண்முகா சரணம்...

22.03.2022... நேசமுடன் விஜயராகவன்....

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.