23 கையடக்க தொலைபேசிகளுடன் நால்வர் கைது

 


காத்தான்குடியில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை கொள்ளையிட்ட அக்கரைப்பற்று இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 4 பேரை நேற்று கைது செய்ததுடன் 8 இலட்சம் ரூபா பெறுமதியான 23 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


கடந்த முதலாம் திகதி காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள கையடக்க தொலைபேசி நிலையம் பூட்டியிருந்த நிலையில் உடைத்து அங்கிருந்த சுமர் 24 இலட்சம் ரூபா பெறுமதியான 75 கையடக்க தொலைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவரை 12 கையடக்க தொலைபேசிகளுடனும் இறக்காமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 3 பேரை 11 கையடக்க தொலைபேசிகளுடனும் கைது செய்துள்ளதாகவும் பிரதான சூத்திரதாரி தப்பி ஓடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- நிருபர் சரவணன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.