சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!!

 


இலங்கை கடற்படையினர்  சட்டவிரோதமாக  மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களைக் கைது செய்துள்ளனர். ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இவர்கள் நெடுந்தீவுக்கு தெற்கில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர் எனவும்  தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பித்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. 


கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.