பாகிஸ்தான், அவுஸ்ரேலியா மூன்றாம் நாள் போட்டி!!


பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி தற்போது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலியா அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில், மார்னஸ் லபுஸ்சேகன் 69 ஓட்டங்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், அவுஸ்ரேலியா அணி 205 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

ராவல்பிண்டி மைதானத்தில் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 476 ஓட்டங்களை பெற்றிருந்த போது, முதல் இன்னிங்சை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அசார் அலி 185 ஓட்டங்களையும் இமாம் உல் ஹக் 157 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லியோன், பெட் கம்மின்ஸ் மற்றும் மார்னஸ் லபுஸ்சேகன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ஓட்டங்களை பெற்றது.

உஸ்மான் கவாஜா 97 ஓட்டங்களுடனும் டேவிட் வோர்னர் 68 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். சாஜித்கான் மற்றும் நவுமான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இன்னமும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை அவுஸ்ரேலியா அணி இன்று தொடரவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.