தென்னாபிரிக்காவை வீழ்த்தியது பங்களாதேஷ்!!


தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 338 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

சென்சூரியனில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சகிப் அல் ஹசன் 77 ஓட்டங்களையும் லிடொன் தாஸ் மற்றும் யாசிர் அலி ஆகியோர் தலா 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மார்கோ ஜென்சன் மற்றும் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் லுங்கி ங்கிடி, ரபாடா மற்றும் பெலுக்வாயோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 315 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 48.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், பங்களாதேஷ் அணி 338 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ராஸ்ஸி வெண்டர் டஸன் 86 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 79 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மெயிடி ஹசன் 4 விக்கெட்டுகளையும் டஸ்கின் அஹமட் 3 விக்கெட்டுகளையும் சொரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் மொஹமதுல்லா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகிப் அல் ஹசன் தெரிவுசெய்யப்பட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.