இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவடைந்தது!!


இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி பதிலுக்கு முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில், ஜோசுவா டா சில்வா 54 ஓட்டங்களுடனும் கெமார் ரோச் 25 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி 28 ஓட்டங்கள் முனனிலையில் உள்ளது.

நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) க்ரெனடாவில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சகீப் மொஹமுத் 49 ஓட்டங்களையும் ஜெக் லீச் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கெமார் ரோச், கெய்ல் மேயர்ஸ், அல்சார்ரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜெர்மைன் பிளக்வுட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இன்னமும் 2 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாம்நாள் ஆட்டத்தை இன்று மேற்கிந்திய தீவுகள் அணி தொடரவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.