எழுவர் விடுதலை குறித்து விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!!

 


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரின் விடுதலைக் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில்  சிறையில் இருக்கும் நளினி, ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்க இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இது குறித்து ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காத நிலையில், நளினியை விடுதலை செய்வது குறித்து எவ்வாறு உத்தரவுப்பிறப்பிக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பில்  அமைச்சரவையின் தீர்மானம் குறித்து  தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.