செல்வந்தர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிப்பு!!

 இந்தியாவில் பணம் படைத்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் மாத்திரம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைட் பிராங்க் என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் உலக அளவில் சொத்து விவர அறிக்கையை தயாரித்துள்ளது.

குறித்த அறிக்கையில், 3 கோடி டொலர் மற்றும் அதற்கு மேல் நிகர சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களை பெரும் பணக்காரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களின் எண்ணிக்கை கடந்த 2020-ம் ஆண்டு உலக அளவில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 828 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 6 லட்சத்து 10 ஆயிரத்து 569 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு 12 ஆயிரத்து 287 ஆக இருந்த பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 13 ஆயிரத்து 637 ஆக அதிகரித்தது. ஒரே ஆண்டில் 11 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பெங்களூர் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து டெல்லி, மும்பை ஆகிய இடங்களும் இடம்பிடித்துள்ளன. பங்குச்சந்தையின் வளர்ச்சியும்,  டிஜிட்டல் புரட்சியும்தான் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்கள் என்று ‘நைட் பிராங்க்’ நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.