மஹிந்த தேசிய அரசு செய்தியை நிராகரித்தார்!!

 


தேசிய அரசமைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக வெளியாகும் தகவல்களைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியையும் உள்வாங்கி தேசிய அரசொன்றை அமைப்பதற்கு அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது எனவும் கூறப்பட்டது.


இந்நிலையில், தேசிய அரசு ஒன்றை நிறுவுதல் தொடர்பில் எவ்வித பேச்சும் நடத்தப்படவில்லை எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.


அதேவேளை, தேசிய அரசு அமைக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.