இன்று 15 மணிநேர மின்வெட்டு!!


நாளைய தினம் 13 மணிநேரம் மின் தடை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவிடம் அனுமதி கோாியுள்ளது.


தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றைய தினம் 15 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் இலங்கை மின்சார சபை இந்த மாதம் 5 ஆம் திகதி வரை இவ்வாறான மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.