பின்னிலையில் இருக்கும் இலங்கை அணி!


இந்தியா மற்றும் இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, நேற்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 28 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில், திமுத் கருணாரத்ன 10 ஓட்டங்களுடனும் குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை கிரிக்கெட் அணி 419 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

பெங்களூர் மைதானத்தில் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஒட்டங்களாக, ஸ்ரேயஸ் ஐயர் 92 ஒட்டங்களையும் ரிஷப்பந்த் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லசித் எம்புல்தெனிய மற்றும் பிரவீன் ஜயவிக்கிர ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுகளையும் லக்மால் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை கிரிக்கெட் அணி, 109 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, மத்தியுஸ் 43 ஓட்டங்களையும் டிக்வெல்ல 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பும்ரா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் மற்றும் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டேல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

143 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 303 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதனால், இலங்கை அணிக்கு 447 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஒட்டங்களாக, ஸ்ரேயஸ் ஐயர் 67 ஓட்டங்களையும் ரிஷப்பந்த் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரவின் ஜயவிக்கிரம 4 விக்கெட்டுகளையும் எம்புல்தெனிய 3 விக்கெட்டுகளையும் விஷ்வ பெனார்டோ மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 447 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிங்கிய இலங்கை கிரிக்கெட் அணி, நேற்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 28 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்னமும் 9 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை இலங்கை கிரிக்கெட் அணி, இன்று தொடரவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.