உக்ரைன் அதிகாரி சுட்டுக்கொலை!!


 உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் நீடித்துவரும் நிலையில்  ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உக்ரைன் அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தற்போது இந்த அதிகாரி படுகொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. 


கடந்த மாதம் 28 ஆம் திகதி மற்றும் கடந்த 3ஆம் திகதி என 2 கட்டங்களாக இரு நாடுகளுக்கு இடையில் சமரச பேச்சுவார்த்தை இடம்பெற்ற நிலையில்,3வது கட்ட பேச்சுவார்த்தை  திங்கள் கிழமை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


டெனிஸ் கிரீவ் என்கிற அந்த அதிகாரி தலைநகர் கீவில் குண்டுக் காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.


இதன் பின்னணி இப்போது தெரியவந்துள்ளது. இவர் தேசத்துரோகத்தில் ஈடுபட்டதால் தான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் எம்.பி. அலெக்சாண்டர் டுபின்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.


டெனிஸ் கிரீவின் தேசத்துரோகம் குறித்து உக்ரைனின் பாதுகாப்பு சேவை அமைப்புக்கு தெளிவான தகவல்கள் கிடைத்து இருப்பதாகவும் மற்றொரு எம்.பி.யான ஒலெக்சி ஹோன்சரெங்கோ உறுதிப்படுத்தியுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.