இன்றைய வானிலை அறிவிப்பு!!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய அறிக்கையில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் வலுவிழந்துள்ளதாகவும் இதன் காரணமாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் எனவும்
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை