இன்று பலத்த மழை - வானிலை அறிவிப்பு!!

 


இன்று (11)  இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும்  வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.


 மாலை அல்லது இரவு வேளையில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என்றும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில், மழையற்ற வானிலை நிலவும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.