உக்ரைன் மோதல் குறித்து ரஷ்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

 


உக்ரைன் மீதான ரஷியாவின் போரை தொடரும் என அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார்.

மேற்கு நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷியாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை உக்ரைன் மீது போர் தொடரும் எனவும் அதில் இருந்து பின் வாங்கப்போவதில்லை என ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி ஷோய்கு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடரும்  நிலையில், ரஷிய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகின்றன.

 தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய ராணுவத்தினர் அரச கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீதும் ரஷிய போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.