கட்டணம் செலுத்தாதலால் கடலில் காத்திருக்கும் கப்பல்!


டீசலுடன் சர்வதேச கடற்பரப்பில் காத்திருக்கும் கப்பலானது கட்டணம் செலுத்தப்படும் வரை இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மறுப்புத் தெரிவித்துள்ளது.

டீசலுடன் சர்வதேச கடற்பரப்பில் கப்பல் தரித்து நிற்பதாகவும் கட்டணம் செலுத்தப்பட்டால் தான் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு அவசியமான டீசலுடன் கப்பல் ஒன்று சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்பதாகவும் கட்டணம் செலுத்தப்பட்டால் மாத்திரம் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முடியும் என கப்பலின் கேப்டன் தெரிவித்துள்ளதாகவும்,கட்டணம் செலுத்தப்படாததால் அவர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மறுக்கின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கப்பலில் எவ்வளவு டீசல் உள்ளது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் கட்டணம் செலுத்தப்படும் வரை கேப்டன் கப்பலை சர்வதேச கடற்பரப்பில் வைத்திருக்கின்றார் என தெரிவித்துள்ளனர்.

கப்பலிற்கு கட்டணத்தை செலுத்துவோம் என ஜனாதிபதி உறுதியளித்துள்ள போதிலும் ஜனாதிபதியின் உத்தரவாதத்தை கப்பல் கேப்டன் ஏற்க மறுத்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.