வவுனியாவில் நடந்த அதிசய சம்பவம் - குவியும் மக்கள்!!
பசு மாடு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவிலுள்ள பனையாண்டான் எனும் கிராமத்திலுள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
இவ்வாறான அதிசய சம்பவம் அப் பகுதியில் முதன்முறையான இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக பசு மாடொன்று ஒரு கன்றை ஈன்றுவது இயற்கை. சில சந்தர்ப்பங்களில் இரண்டு கன்றுகளையும் ஈன்றுள்ளன.
இந்நிலையில் மூன்று கன்றுகளை ஒரே நேரத்தில் ஈன்றுள்ளமையானது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருமளவு மக்கள் இவ் அதிசய சம்பவத்தைக் காண பசு மாட்டின் உரிமையாளரின் வீட்டுக்குச் சென்று வருகின்றனர்.
கருத்துகள் இல்லை