மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல்!!

 


மட்டக்களப்பில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளர் மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்ததுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது இன்று வெள்ளிக்கிழமை (29-04-2022) இரவு விபுலானந்தா கிழக்கு பல்கலைக்கழகத்திலேயே இடம்பெற்றுள்ளது.

மேலும், விரிவுரையாளரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்கலைக்கழக அதிபர் மற்றும் ஆசிரியர்களை பல்கலைக்கழகத்தில் வைத்து பூட்டி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மாணவர்களிடம் சம்பவம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.