உக்ரைனுக்கு ஆதரவாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன்!
உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீதான அழுத்தத்தை வாரந்தோறும் அதிகரிக்கவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
கியூவிற்கு திடீர் விஜயம் செய்த பின்னர் அங்கு கருத்து தெரிவித்த அவர், தமது பங்காளிகளுடன் இணைந்து பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கப் போவதாக கூறினார்.
சுதந்திர இறையாண்மை கொண்ட உக்ரைன் மீண்டும் எழுச்சி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக உக்ரைன் மக்களின் வீரத்திற்கும், தைரியத்திற்கும் நன்றி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை