பெண் கழுத்து நெரித்து கொலை!

 


தலவாக்கலை, வடகொட பிரதேசத்தில் வீடொன்றில் பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.


84 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வீட்டில் தனிமையில் இருந்த போது துணியினால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு அவர் அணிந்திருந்த காதணிகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் மற்றும் பிரேத பரிசோதனை இன்று (09) நடைபெறவுள்ளதுடன், தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.