எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகம்!!
நாடளாவிய ரீதியில் இன்று(புதன்கிழமை) முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து 3 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நாளாந்தம் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை மேலும் 3 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை