மன்னாரில் தனிநபர் கவனயீர்ப்பு போராட்டம்!!

 


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகி வீடு செல்லக்கோரி மன்னார் நகர் பகுதியில் தனி நபர் ஒருவர் இன்று காலை தொடங்கிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றார்.

மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதியில் #go home gota என வாசகம் எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு குறித்த நபர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

இதன்போது முகமுடி அணிந்து குறித்த பதாகையை ஏந்தியவாறு அமைதியாக நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.